• Jul 26 2025

குழந்தை பிறந்த பின்னர் மனைவியின் வளைகாப்பு வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகர் செந்தில்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


மிர்ச்சி செந்தில் என்றாலே அவர் வானொலியில் நடத்திய நிகழ்ச்சிகளும், அவரது குரலும் தான் முதலில் நியாபகம் வரும்.அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கலக்க ஆரம்பித்தார்.

பின் தொடர்ந்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் 1,2 என நடித்துவந்த மிர்ச்சி செந்தில் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார்.விரைவில் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, சில புகைப்படங்கள், புரமோக்கள் வெளியாகிவிட்டது.

செந்தில் அவர்கள் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த ஸ்ரீஜா என்பவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட்டார்கள், அண்மையில் பெண் குழந்தையும் பிறந்தது.


இந்த நிலையில் செந்தில் வளைகாப்பு நடந்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.அத்தோடு ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement