• Jul 24 2025

தனது பிறந்தநாளை காதல் கணவருடன் கொண்டாடும் சீரியல் நடிகை பிரியங்கா..! ரொமாண்டிக் போட்டோஸ் இதோ ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. கடந்த 2010ஆம் ஆண்டு சந்திர சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தமிழ் சினிமாவில் தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார்.

சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னத்திரை பக்கம் திரும்பினார் நடிகை பிரியங்கா நல்காரி.2018ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் .ரோஜா சீரியலில் ஹீரோயினாக ரோஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தற்போது  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தனது காதலரை ரகசிய திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்தவகையில் தற்போது இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கணவருடன் என்ஜோய் பண்ணி செலிபிரேட் பண்ணி வருகிறார்.அதன் போது எடுக்கப்பட்ட பாகைப்படைகளை தற்போது பகிர்ந்துள்ளார்.

இந்த அழகிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement