• Jul 26 2025

"ஒரு ஆம்பளய மா-ன்னு கூப்டலாமா?".. தூக்கத்தில் உளறிய அசீம்..கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில் கடந்த வாரம்  பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது.மேலும்  அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

அத்தோடு, இதில் சிவாஜி கணேசனின் வக்கீல் கதாபாத்திரத்தில் அசீமும், வடிவேலுவின் கான்டராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் தனலட்சுமியும் வலம் வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான விஷயம், தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றது.


பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே அசீம் படுத்திருக்க, அவரிடம் தனலட்சுமி பேசிக் கொண்டு நிற்கிறார். எனினும் அப்போது, "ஒரு ஆம்பளைய பாத்து 'மா'-வா?" என தனது ஆண் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தி ஜாலியாக அசீமிடம் கேள்வி எழுப்புகிறார் தனலட்சுமி. இதற்கு படுத்திருந்த படி பதில் சொல்லும் அசீம், "சரி, நீயே இப்போ கதிர வந்து பேர் சொல்லி கூப்பிடுறது" என கூறியபடி பாதியிலேயே அசீம் தூக்கத்தில் உளறுவது போல பேச ஆரம்பிக்கிறார்.


இதனைக் கண்டதும் தூக்கத்தில் உளறுவது பற்றி தனலட்சுமி கேட்க, மெல்ல எழுந்து அமரும் அசீம், "எல்லாரும் உள்ள போய்ட்டாங்க. எங்கடா அவங்க?" என கேட்கிறார். இதற்கு மத்தியில், தனலட்சுமியும் அசீமை பார்த்து, "மொட்டை தல எந்திரி" என்றும் ஜாலியாக சொல்கிறார்.


Advertisement

Advertisement