• Jul 26 2025

'தி லெஜண்ட்' படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டியதா?..மனம் திறந்த இயக்குநர்கள் ஜேடி -ஜெர்ரி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என  கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ‘தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாயை திரையரங்க டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

விரைவில் இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் சேனல் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை படத்தின் இயக்குநர்கள் ஜேடி -ஜெர்ரி பேட்டி அளித்துள்ளனர். குறிப்பாக, "இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க முதலில் நீங்கள் கேட்டதாக தகவல் வெளியாகி இருந்தன. அது உண்மையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க கேட்கவில்லை. வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருந்தோம்" என இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி பதில் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement