• Jul 26 2025

வாய மூடுங்க...! டார்கெட் பண்ணிய அமுதவாணன்... வச்சு செய்த விக்ரமன் - நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயெ சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. அந்த வகையில் நேற்றைய தின எப்பிஷோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது இந்த வாரம் பேக்கரி டாஸ்க் நடைபெற்று வருகின்றது. ரேம்ப்பில் வரும் பொருட்களை யார் முதலில் கைப்பற்றுகிறார்களோ அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும். இதில் அட தேனடை மற்றும் கண்ணா லட்டு திங்க ஆசையா ஆகிய பெயரில் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.


எனவே ரேம்ப்பில் வரும் பொருட்களை எடுக்கும் போது அமுதவாணன் மற்றும் விக்ரமனுக்கிடையில் மோதல் ஏற்பட்டு விடுகின்றது. இதனால கடுப்பான விக்ரமன் அமுதவாணனைப் பார்த்து நீங்க தனிப்பட்ட கோபத்தை வச்சு பண்ணிட்டு இருக்கிறீங்க. அப்படிப் பண்ணாதீங்க என்று கூறுகின்றார். இவர்கள் இவ்வாறு சண்டை பிடி்சிட்டு இருக்கும் போது அமுதவாணனை தனலக்ஷ்மி கூட்டிச் செல்கின்றார்.

தொடர்ந்து ரேம்ப்பில் வரும் பொருட்களை எடுக்கும் போது ஒவ்வொருவரும் முட்டி மோதிக் கொள்கின்றனர். இதன் பின்னர் பிளாஸ்டார்க் டிவி முன்னால் எல்லோரும் அமர்ந்திருக்கும் போது பிக்பாஸ் ஜனனியை அழைத்து இந்த வீட்டில் முகமூடி அணிந்திருக்கும் அதாவது நல்லவர் போல நடிப்பவர் யார் என்று கேட்கப்பட்டது.


அதற்கு ஏடிகே என்றும் ஏடிகே ஒருவர் பிழை செய்தால் அந்த பிழையை மன்னிப்பது போல சொல்லுவார் பின்பு எல்லார் கிட்டையும் வந்து சொல்லிட்டு இருப்பார் என்று கூறினார். இதனால் கடுப்பான ஏடிகே நான் ஜனனியை தங்கச்சி மாதிரி பார்த்தேன். ஆனால் அவ என்னை அப்படி பார்க்கல அவ பேசாவிட்டாலும் நானாக போய் பேசுவேன். என்னைப் போய் கெட்டவன் என்று கூறிவிட்டாளே என்று கூறி புலம்புகின்றார்.

இதனால அங்கு பாசப் போராட்டமே நடந்திச்சு. தொடர்ந்து ஏடிகே மற்றும் ஜனனியை ஏனைய போட்டியாளர்கள் சமாதானப்படுத்திக் கொண்டார்கள். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது எனலாம்.

Advertisement

Advertisement