• Jul 25 2025

’கொரோனா குமார்’ படத்தில் இருந்து விலகிய சிம்பு.!காரணம் இது தானாம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநரான கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் , சிம்பு கொரோனா குமார் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா குமார் திரைப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்குவதாகவும், படத்தில் பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இருந்தாலும் , சிம்பு தனிப்பட்ட சில காரணங்களால் இந்த திரைப்படத்தில் இருந்து  விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியான நிலையில, தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

வேறு வேறு படத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆகி வருகிறாராம். எனவே அவர் கொரோனா குமார் படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

மேலும் சிம்புவின் 50-வது படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement

Advertisement