• Jul 25 2025

மகளை காப்பாற்ற கொலை செய்த சிவகாமி..சந்தியா எடுக்கப்போகும் முடிவு என்ன..பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி-2.இதில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது பார்வதியால் அசிங்கப்பட்டு ஜெயிலுக்கு போன அவளின் முன்னாள் காதலன் தண்டனை முடிந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து பார்வதியை மிரட்டுகின்றான்.

இதனை அனைத்தும் தனது கணவனிடம் சொல்லி விடுகின்றார் பார்வதி.இதனை சந்தியாவிடம் இருவரும் சொல்ல முற்பட்டும் சொல்ல முடியாமல் போகின்றது.

இவ்வாறுஇருக்கையில்  பார்வதியின் கணவனை முன்னாள் காதலன் கடத்தி அடிக்க பார்வதி அந்த இடத்திற்கு வந்துவிடுகின்றார்.அப்பொழுது உனது கணவனை விடவேண்டும் என்றால் நான் சொல்லுறதை நீ கேட்க வேண்டும் என்று கூறுகின்றான்.

அது போலவே அவளும்செய்கின்றேன் எனக் கூறுகின்றாள்.பின் தனக்கும் அவளுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்து பால் கொண்டு தருமாறு கூறுகின்றான்.இந்த நேரம் பார்த்து அவளை வலுக்கட்டாயமாக  அடைய முற்படும் போது பார்வதியின் மானத்தை காப்பாற்ற வில்லனின் தலையில் அடித்து கொலை செய்கின்றார் சிவகாமி.அடுத்து என்ன நடக்கப்போகின்றது.சந்தியா என்ன செய்யப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..



Advertisement

Advertisement