• Jul 25 2025

விக்ரம் பற்றிய உண்மைகளை உடைத்த சோனாலி-அதிர்ச்சியில் உறைந்த இனியா?- திருமணம் நடக்குமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் புத்தம் புதிதாக ஆரம்பித்து சூப்பர் ஹிட்டாக ஊடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இனியா. இந்த சீரியல் அடுத்தடுத்தாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

மேலும் போலீஸாக இருக்கும் விக்ரம் திருந்தி விட்டதாக எண்ணி இனியா விக்ரமைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததோடு தற்பொழுது ரிசப்ஷனும் நடந்து முடிந்து விட்டது.


இப்படியான நிலையில் இனியா தனது நண்பியான சோனாலியை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் விக்ரம் இனியாவுக்கு தெரியாமல் சோனாலியின் வாழ்க்கையை அழித்து விட்டார். இது ஒன்றையும் அறியாத இனியா சோனாலி சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக எண்ணி விடுகின்றார்.

இப்படியான நிலையில் இனியாவுக்கு போன் பண்ணி சோனாலி விக்ரம் பற்றிய உண்மைகளை சொல்லி விடுகின்றார். அத்தோடு விக்ரம் சோனாலியை கடத்த அனுப்பிய ஆட்களிடம் பேசி விட்டு திரும்பும் போது இனியா அதனை கண்டு விடுகின்றார்.இதனால் இனியா விக்ரமின் வலைக்குள் சிக்குவாரா? அல்லது இனியா விக்ரம் திருமணம் நடைபெறுமா என்பதைப் பார்க்க பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement