• Jul 26 2025

அடுத்தடுத்து பிளாப் ஆன படங்கள்... அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ஆமீர் கான் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மேலும் இவர் ஹிந்தி முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.


அதுமட்டுமல்லாமல் ஆமீர் கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவர் அமீர் கான் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளரும் ஆவார்.  மேலும் ஆமீர் கான் நசீர் ஹூசைனால் உருவாக்கப்பட்ட யாடோன் கி பாரத் மற்றும் மத்தோஷ், ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை ஆரம்பித்தார்.


இந்நிலையில் இவர் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அவருடன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படம் ரிலீசுக்கு முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட்டில் பாய்காட் டிரெண்ட் வைரலாகியது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.


இந்நிலையில், தங்கல் படத்துக்கு பின் அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.


அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்காமல் ஒரு பிரேக் எடுக்க உள்ளாராம். அந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், படத்தயாரிப்பில் கவனம் செலுத்தவும் அமீர்கான் முடிவு செய்துள்ளாராம்.

Advertisement

Advertisement