• Jul 25 2025

கார்த்திக் மீது லெட்டரை வீசி எறிந்த சுந்தரி!- எதிர்பாராத விதமாக வந்த அனு- இனி நடக்கப் போவது என்ன ?

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் தற்பொழுது  கார்த்திக் பற்றிய உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி வீட்டினருக்கு தெரிந்து விட்டது. சுந்தரியின் மாமாவிற்கு தெரிந்தால் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இது ஒரு புறம் இருக்க அனு கார்த்திக் பற்றி எதுவும் தெரியாமல் கார்த்திக்குடன் வாழ்ந்து வருகின்றார். கார்த்திக்கிற்கு கத்திக் குத்து விழுந்ததால் சுந்தரி தான் அவரைக் கவனித்து வருகின்றார்.


இப்படியான நிலையில் சுந்தரி கார்த்திக்கிடம் கத்திப் பேசிக் கொண்டிருக்கின்றார். கார்த்திக் தன்னுடைய வீட்டிற்கு அனுப்பிய லெட்டரையும் அவரது முகத்தில் எறிந்து விடுகின்றார்.இந்த நேரத்தில் அனு உள்ளே வருகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement