• Jul 25 2025

மாரடைப்பால் திடீரென மரணமடைந்த சூர்யா பட தயாரிப்பாளர்-அடடே இது முன்னணி நிறுவனமாச்சே- இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25க்கு மேற்பட்ட படங்களைத் தயாரித்த நிறுவனம் தான்  'லட்சுமி மூவி மேக்கர்ஸ்'.இந்த நிறுவனம் கமல், விஜய், சூர்யா, ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளது.

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான முரளிதரன் சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். இது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

 அன்பே சிவம்,பகவதி ,உன்னை நினைத்து உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த இந்த நிறுவனம் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தைத் தயாரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement