• Jul 25 2025

ஷிவானியுடன் சூர்யாவிற்கு முடிவாகிய நிச்சயதார்த்தம்... ஆதங்கத்தில் சாரதாவிடம் கொதிக்கும் வெண்ணிலா... பரபரப்பான திருப்பங்களுடன் வெளிவந்த வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் இணைந்துள்ள 'காற்றுக்கென்ன வேலி' தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இளைஞர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். 


இதன் காரணமாக சீரியல் கதையும் முழுக்க முழுக்க இளைஞர்கள் பாணியில் கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் சூர்யா ஏற்கெனவே வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டி விட்டார். ஆனால் தற்போது ஷிவானியுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் சூர்யா "நாளைக்கு எனக்கும் ஷிவானிக்கும் நிச்சயதார்த்தம், காலையில் 8மணிக்கு தட்டு மாற்றிடுவாங்க, நீ மறக்காமல் நேரத்திற்கு வந்திடு" என ஒருவரிடம் கூறுகின்றார். அதனைக் கேட்ட வெண்ணிலா அதிர்ச்சியடைகின்றார்.


மறுபுறம் சாரதாவிடம் சென்ற வெண்ணிலா "நிச்சயதார்த்தத்திற்கு ரெடி பண்ணிட்டீங்களா மாம், எதோ சிம்பிளா பண்ணப் போறீங்களாமே" எனக் கேட்கின்றார். அதனைக் கேட்டதும் அவர்களும் பதில் கூறாது அமைதியாக இருக்கின்றனர்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement