• Jul 24 2025

நான் இப்படி ஆனதற்கு காரணமே சூர்யா சேர் தான்- வெளிப்படையாகப் பேசிய ஜி.வி பிரகாஷ்- இதற்கு முதல் என்ன செய்தார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமல்லாது நடிகராகவும் சிறந்து விளங்குபவர் தான்  ஜி வி பிரகாஷ்.இவர் இசையமைப்பில் பல படங்கள் சிறப்பான பாடல்களுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன இவரை இசை அசுரன் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

குறிப்பாக கிராமத்து பின் புலங்களில் வெளியாகும் படங்கள், இவரது இசையால் உயிர் பெற்று வருகின்றன. இவ்வாறு அதிகமான வெற்றி படங்களை இவர் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயில், பேச்சிலர் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 


ஏ ஜிவி பிரகாஷ் தன்னுடைய 72வது படமாக சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் ஒவ்வொரு பிரிவுகளில் கிடைத்தது. சூர்யாவிற்கும் இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ், தான் ஆரம்பத்தில் ஜிங்கிள்ஸ் வாசித்த போது அதை கேட்டு சூர்யா தன்னை பாராட்டியதாகவும் படங்களில் பணியாற்றுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இது தனக்கு உத்வேகமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் இந்த கூட்டணி தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும் ஜி வி பிரகாஷ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Advertisement

Advertisement