• Jul 26 2025

கோதையின் காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்கிய தமிழும் சரஸ்வதியும்- கடுப்பான அர்ஜுன்- செம குஷியில் வசுந்தரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதையின் கணவர் இன்று தமிழ் சரஸ்வதியின் கல்யாண நாள் என்று சொல்ல எல்லோரும் திட்டுகின்றனர். தொடர்ந்து அவர் நான் சொல்ல வந்ததே வேற தமிழின் கல்யாணம் நடந்த போது  தான் கோதை நெஞ்சு வலியில ஹாஸ்பிட்டலில் அட்மிட்டாகி உயிர் பிழைச்சு வந்தா. அதான் அந்த நாள்ல ஏதாவது நல்லது பண்ணினால் கோதைக்கு நல்லம் என்று முதியோர் இல்லத்துக்கு சாப்பாடு போட சொல்லி இருக்கிறேன்.


அங்க தான் போக கோதையை அழைக்கிறேன் என்று சொல்ல வசு சந்தோஷப்படுகின்றார். தொடர்ந்து கோதையும் கணவரும் அர்ஜுன் கார்த்திக் நால்வரும் சென்று அநாதை இல்லத்தில் உணவு வழங்குகின்றனர். பின்னர் தமிழும் சரஸ்வதியும் பைக்கில் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டே இந்த இல்லத்துக்கு வர அங்கு கோதை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.

அப்போது அந்த இல்லத்தின் நடத்துனர் இவங்களுக்கு இன்றைக்கு கல்யாண நாள் அதான் சாப்பாடு கொடுக்க வந்திருக்கிறாங்க என்று சொல்ல கோதை கிளம்ப முயல அவரது கணவர் தடுத்து நிறுத்துகின்றார். பின்னர் தமிழும் சரஸ்வதியும் சாப்பாடு பரிமாறிவிட்டு முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர்.


பின்னர் கோதை காலில் விழச் சொல்ல இருவரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கோதை ஆசீர்வாதம் வழங்குகின்றார். இதைப்பார்த்து அர்ஜுன் கடுப்பாகின்றார். பின்னர் சரஸ்வதி நடந்ததை நினைத்து சந்தோஷப்படுகின்றார். இந்த சந்தோஷத்துடனேயே கடைக்கு வேலைக்குச் செல்கின்றார். இதே போல கோதையின் கணவரும் முதியோர் இல்லத்தில் நடந்ததைப் பற்றி சொல்கின்றார். இதனால் அர்ஜுனின் குடும்பத்தினர் கடுப்பாகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement