• Jul 24 2025

வீட்டை விட்டு வெளியேறிய கோதையை தன்னுடைய வீட்டில் தங்க வைத்த தமிழ்- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே...

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ராகினியின் திருமண நாளன்று கோதைக்கு அர்ஜுன் பற்றிய உண்மைகள் தெரிந்ததோடு தமிழ் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதும் தெரிந்து விட்டது.

மேலும் அர்ஜுன் கோதையின் சொத்துக்களை எல்லாம் ராகினியின் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் இனிமேல் இந்த சொத்திலும் கம்பனியிலும் உங்களுக்கு உரிமை இல்லை என கோதையின் சொத்துக்களை ராகினியை வைத்து அர்ஜுன் அபகரித்து விட்டார்.


இதனால் வீட்டை விட்டு வெளியே போகும் கோதையும் அவரது குடும்பத்தினரும் எங்கே போவார்கள், தமிழ் அவர்களை ஏற்பார்களா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் கோதை தன்னுடைய மருமகள்களான வசு மற்றும் சரஸ்வதியுடன் இணைந்து தமிழ் வீட்டில் நிற்பது போல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழ் கோதையை மன்னித்து ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது போலத் தெரிகின்றது.

Advertisement

Advertisement