• Jul 25 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்….சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன்.

அதன்பின்னர் அவர் கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி, விஜய் டிவியின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளியில் இணைந்தார்.

அதாவது தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 3-ஆவது சீசனில் ரோஷினி ஹரிப்பிரியன் ஒரு போட்டியாளராக இணைந்து கொண்டார்.

குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எலிமினேஷனும் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்டில் ரோஷினி ஹரிப்பிரியன் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்களின் கனவு நாயகி ரோஷினி ஹரிப்பிரியன் வெளியேறி இருப்பதனால் கண்ணம்மா ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் சோகத்தில் இருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement