• Jul 25 2025

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான முதல் புகைப்படம் ..யார் யார் உள்ளார்கள் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜனி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் சென்னையில் ஆரம்பமாகி உள்ளது.

அத்தோடு  இதனை வெறித்தனமான  பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் இயக்குநர் நெல்சன் உடன் ஸ்டண்ட் சிவா மற்றும் ஷூட்டிங் நடைபெறவுள்ள காவல் நிலைய செட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்..




Advertisement

Advertisement