• Jul 24 2025

திருமணம் ஆகாமல் ஒரே வீட்டுக்குள் அமீர் - பாவனி - அம்மாவே அனுப்பி வைத்த சம்பவம்....வெளியான வீடியோவால் உடைந்த உண்மை.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாவனி. இவர் திருமணம் ஆன சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தவர். இதன் பின்னர் மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

அப்போது அதில் நடன இயக்குநர் அமீரும் கலந்து கொண்டார்.அப்போது அமீர்  தனது காதலை அவரிடம் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார்.


அதன்பின், “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. 

அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இருவரும்  செம ஹிட்டாக நடித்துள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில், இருவரும் லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகின்றனர். அதன்படி, ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அங்கு அமீர் தனது பெரியம்மா மற்றும் அண்ணன் மற்றும் பாவனியுடன் குடும்பமாக லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறோம். எங்க அம்மாவே அமீர் கூட இரு என்று அனுப்பி வைத்தார்கள் என்று பாவனி தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement