• Jul 24 2025

அடுத்த ரெட் கார்ட் யோகிபாபுவிற்கு தான்...சர்ச்சையில் சிக்கியது எப்படி..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள் அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அப்படி நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் சிலருடன் பிரச்சனை செய்ததால் சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்ட் போடப்பட்டது.

அதன்பின்னர்  4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டுதான் ரெட் கார்ட் நீக்கப்பட்டு பிரச்சனை எல்லாமே சுமுகமாக முடிந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் சந்திரமுகி 2 வில் தன் வேலையை காமித்திருக்கிறார் என தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.



அதாவது படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராமல் இழுத்தடித்து வருவதால் இயக்குநர் பி வாசு வடிவேலு மீது கடும்கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது.

இவ்வாறுஇருக்கையில் வடிவேலுவின் அந்த தலைக்கனத்தை தற்போது ஒரு நாளைக்கு லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகர் யோகி பாபுவும் பின்பற்றி வருகிறாராம். 9 மணிக்கு கால்ஷீட் கொடுத்து 12 மணிக்கு தான் வடிவேலு படப்பிடிப்புக்கு வருவார் என்று கூறப்படுகின்றது.

அவரைபோல் யோகிபாபுவும் திருநெல்வேலியில் நடக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு, 9 மணிக்கு கால்ஷீட்டிற்கு 11.30 மணிக்கு வந்து ஒரு மணிநேரம் கழித்து பிரேக் என்று எடுத்துக்கொள்கிறாராம்.


அத்தோடு மொத்தமே 4 மணி நேரம் தான் அதிகபட்சமாக நடிப்பதால் தயாரிப்பாளர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். உச்சத்தை அடைந்து தலைக்கனத்தில் ஆடினால் ரெட் கார்ட் தான் கொடுப்பார் என்று பலர் யோகி பாபுவை விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement