• Jul 24 2025

‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகையின் மகளது புகைப்படத்தை மார்பிங் செய்த நபரை அதிரடியாக கைது செய்த போலீசார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் பிரவீனா. இவர்  வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி-2, லாபம், கோமாளி ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகின்றார்.

அதே போல சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.அந்த நிலையில் தன்னையும் தனது மகளையும் மார்பிங் செய்து போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.


 இந்த புகாரின் அடிப்படையில் பாக்கியராஜ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.தற்போது அந்த நபர் ஜாமினில் வெளிவந்து,  பழிவாங்கும் நோக்கில் தன்னையும், தனது மகள் மற்றும் குடும்பத்தினரை மார்பிங் செய்து புகைப்படங்களை பரப்புவதாக நடிகை பிரவீனா கேரள சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

மேலும் தனது குடும்பத்தினர் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி உள்ளார் என்றும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நாக்பூரை சேர்ந்த பாக்கியராஜ் என்ற இளைஞரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement