• Jul 25 2025

ஆழ்ந்த யோசனையில் ஜனனி... டென்சனில் குணசேகரன்... மணக்கோலத்தில் வந்த ஆதிரை... கரிகாலன் கொடுத்த ரியாக்ஷன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் தொடரான 'எதிர்நீச்சல்' சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் சமீபகாலமாக ரசிகர்கள் பலரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி என்னவெனில் ஆதிரை கல்யாணம் இறுதியில் யாருடன் நடக்கும் என்பது தான்.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி எதைப் பற்றியோ நினைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கின்றார். அதேபோல் குணசேகரனும் ஏதோ ஓர் டென்ஷனில் இருக்கின்றார். 


மறுபுறம் ஜான்சிராணி "நல்ல மருமகளை பார்க்கலாம் என்று ரூமிற்குப் போனால் உன் ஆதாக்காரி அந்த அதட்டு அதட்டுறா, என்னானு கேட்டு சொல்லு" என குணசேகரனிடம் கூறுகின்றார். 


அந்த சமயத்தில் ஆதிரை மணக் கோலத்தில் வருகின்றார். அதனைப் பார்த்த கரிகாலன் ஆவென வாயைப் பிளந்து பார்க்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement