• Jul 25 2025

லியோ படப்பிடிப்பில் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி- யாருக்கும் சொல்லாமல் கிளம்பியது ஏன்?- வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வரும் நிலையில், படத்தின் பூஜை முதல் காஷ்மீருக்காக தனி விமானத்தில் படக்குழுவுடன் சென்றது,

 காஷ்மீரில் 50 நாட்கள் ஷூட்டிங் முடிந்து திரும்பி வந்தது, அங்கே பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் வீடியோவாகவும் போட்டோவாகவும் வெளியிட்டிருந்தனர்.


இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து த்ரிஷா மற்றும் படக்குழுவினருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விஜய்யை அழைத்துள்ளனர். நடிகர் விஜய்யும் வந்து த்ரிஷாவுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என பார்த்தால், படக்குழுவினருடன் க்ரூப் போட்டோ என்கிற பேரில் கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கில் ஆட்கள் அலைமோதி விட்டனராம்.


இந்த கூட்டத்தில் எல்லாம் நின்று என்னால் போஸ் கொடுக்க முடியாதுங்க, நீங்க இதை எங்கிட்ட கமிட்டே பண்ணல என தயாரிப்பு தரப்பிடம் சொல்லிவிட்டே நடிகர் விஜய் புறப்பட்டு சென்று விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், தளபதி 68 படத்தை ஆரம்பிக்க விடாமல் லலித் கட்டையை போட்டு வருகிறார் என்பதால், அவர் மீதும் நடிகர் விஜய் கோபத்தில் இருப்பதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.


Advertisement

Advertisement