• Jul 25 2025

மூர்த்தியிடம் உண்மையை மறைத்து ஹாஸ்பிட்டலுக்குச் சென்ற தனம்- யாருக்கும் தெரியாமல் மீனா எடுத்த முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தனம் ஹாஸ்பிட்டலுக்கு போறதுக்காக ஐஸ்வர்யா மற்றும் முல்லையிடம்  ரமணிச்சித்தி வந்திருக்கிறாங்க. அவங்களை பார்க்கப் போறேன் என்று சொல்கின்றார்.இதனால் முல்லையின் அம்மா சாயங்காலம் போகலாம் தானே வெய்யில் அதிகமாக இருக்கு என்று சொல்ல தனம் பரவாயில்லை சித்தி அவங்க அவசரமா வரச் சொன்னாங்க அது தான் போறேன் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து மூர்த்தியும் அந்த நேரம் வந்து தனத்திடம் எங்க போற என்று சொல்ல தனம் சித்தியைப் பார்க்க போறதா சொல்ல மூர்த்தி தான் கொண்டு போய் வீடுறேன வா என்று சொல்ல தனம் இல்லை பரவாயில்லை நான் ஆட்டோவிலையே போய்க்கிறேன். நீங்க கடைக்கு போங்க என்று சொல்ல மூர்த்தி தானே வெளியில் வந்து தனத்தை ஆட்டோவில் ஏற்றி விடுகின்றார்.

ஹாஸ்பிட்டலில் தனம் போய் இருக்கும் போது அங்கே மீனா தன்னுடைய அம்மாவுடன் சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்க வருகின்றார். மீனாவைப் பார்த்ததும் தனம் ஒளிந்து கொள்கின்றார். பின்னர் தனம் போய் டாக்டரிடம் தனக்கு இருக்கும் பிரச்சினை பற்றிச் சொல்கின்றார்.அப்போது டாக்டர் உங்களுக்கு புற்று நோய்இருக்கின்றதோ தெரில அதற்கு ஒரு செக் அப் பண்ணினால் மட்டும் போதும் என்று சொல்ல தனம் பயந்து கொண்டே வெளியில் செல்கின்றார்.


வெளியில் தனம் யோசிச்சுக் கொண்டு நிற்கும் போது மீனா வந்து என்ன என்று கேட்கின்றார். அப்போத தனம் ஒன்றுமில்லை செக்கப்பிற்கு வந்ததாகச் சொல்கின்றார். பின்னர் தனம் சமாளித்து விட்டு செல்ல மீனா சந்தேகப்பட்டு டாக்டரிடம் சென்று கேட்கின்றார். டாக்டர் உண்மையை எல்லாம் சொல்ல அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

தொடர்ந்து மீனா தனத்தைினை நேரில் சென்று பார்த்து வாங்க செக் பண்ணலாம் என்று கூட்டிட்டு போகின்றார். இது குறித்த அப்டேட்  அடுத்த வாரம் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement