• Jul 25 2025

மேகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்த உண்மை- பளார் என்று அறைவிட்ட லக்ஷ்மி- Chellamma சீரியலின் பரபரப்பு Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பகல் நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் எல்லோரும் கோயிலில் ஒன்றாக கூடி நிற்கும் போது செல்லம்மா மேகாவின் கணவரான மகேஷைக் கூட்டிக் கொண்டு வருகின்றார்.


அத்தோடு மேகாவின் கணவர் சாகல, இவர் தான் மேகாவின் கணவர் மகேஷ், ரியாவின் அப்பா என்று எல்லோருக்கும் சொல்லி விடுகின்றார். இதைக் கேட்ட செல்லம்மாவின் அம்மா உயிரோட இருக்கிற புருஷன் செத்து போய்விட்டதாக பொய் சொல்லி இருக்கிற, புள்ளைய கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டிருக்கிற என்று அறை விடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement