• Jul 24 2025

ஊர்வசியிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது... மனம் திறந்த பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சனுஷா. இவர் மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார். உதாரணமாக 'ரேனிகுண்டா, நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில் இவர் 6 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் ‘ஜலந்தரா பம்ப்செட் சின்ஸ் 1962’ என்ற படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த 6வருட இடைவெளி ஏன் என்பது குறித்துத் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார். 

அதாவது "தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், மலையாளத்தில் நடிக்கவில்லை. இப்போது ‘ஜலந்தரா பம்ப் செட்’ படத்தில் எனக்குப் பிடித்த ஊர்வசி, இந்திரன்ஸ் ஆகியோருடன் நடித்திருக்கிறேன்" என்றார்.


மேலும் "ஊர்வசியுடன் நடிப்பைப் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஊர்வசி ஒவ்வொரு காட்சியிலும் தனது ரியாக்‌ஷன்கள் மூலம் மயக்கி விடுகிறார். நான் அவரிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன். இன்னும் கற்க நிறைய இருக்கிறது. அவர் சிறந்த நடிகை என்பதில் சந்தேகமே இல்லை" எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement