• Jul 23 2025

''படுக்கைக்கு கூப்பிட்டா இப்படித்தான் செய்யணும்''...ரம்யா நம்பீசன் கொடுத்த ஐடியா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை தீர்ந்தபாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.


இந்நிலையில் நடிகையும், பாடகியுமான  ரம்யா நம்பீசன் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் "சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படி நடக்கும்போது அதை தைரியமாக எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு அழைப்பவர்களிடம் நடிகைகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்துகொண்டு அதை மறுக்க வேண்டும்" என்றார்.


இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement