• Jul 25 2025

முற்றிய கலவரம்... அடிக்க ஓங்கிய சூர்யா... வெறித்துப் பார்த்த வெண்ணிலா... 'காற்றுக்கென்ன வேலி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் இணைந்துள்ள 'காற்றுக்கென்ன வேலி' தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இளைஞர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யா மாணவர்களிடம் பூஞ்சோலை என்று ஒரு கிராமம் இருக்கு, அங்க போகணும் அதற்கு எல்லாருமே  வந்தாகணும், அத்தோட ஒரு குரூப் மட்டும் நாளைக்கே கிளம்பணும்" எனக் கூறுகின்றார்.

இதனையடுத்து வெண்ணிலா, சூர்யா உட்பட மேலும் ஒரு சிலர் காரில் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் காரை வழிமறித்த ஒருவர் பக்கத்து ஊர் திருவிழாவில் கலவரம் ஆகிவிட்டதாகவும், இரு ஊர்காரர்களும் அடிச்சுப்பதாக கூறி திருப்பிப் போக சொல்கின்றார். 


ஆனால் சூர்யா நாங்கள் கட்டாயம் போக வேண்டும் எனக் கூறி அவர்கள் பேச்சைக் கேட்காது செல்கின்றார், அந்த சமயத்தில் சூர்யாவின் காரை வழிமறித்த ஒரு சிலர் அவரை வம்பிழுக்கின்றனர். இதனிப் பொறுத்துக் கொள்ள முடியாத அவர்களின் சட்டைக் காலரை பிடித்து அடிக்க எத்தனிக்கின்றார். இதனை வெண்ணிலா கோபத்துடன் வெறித்துப் பார்க்கின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement