• Jul 24 2025

மீண்டும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கும் விஜய்... எல்லாம் அதுக்காக தான்... மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'தளபதி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனாகவும் திகழ்ந்து வருகின்றார். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகின்றது. மேலும் விஜய் உட்படப ரசிகர்கள் பலரும் தற்போது வாரிசு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். 


அந்தவகையில் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அந்தப் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இருப்பினும் இன்னும் இப்படத்தின் டீஸர், ட்ரைலர் என எதுவும் வெளிவரவில்லை என்பதால் அதற்காக தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறார். அந்தவகையில் வாரம்தோறும் மாவட்ட வாரியாக ரசிகர்களை வர வைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அதன் பின் அவர்களுடன் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொள்கிறார் விஜய்.


இதையடுத்து பிரபல சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய்யை சீண்டும் வகையில் ட்விட்டரில் பேசி இருக்கிறார். அதாவது "மீண்டும் பிரியாணி. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்?" என இப்பதிவில் அவர் கேட்டிருக்கிறார். 


Advertisement

Advertisement