• Jul 26 2025

மைக்கை கழட்டிப் போட்ட விக்ரமன்-பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை-பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு முழுவதும் அரண்மனையாக மாறி உள்ளது. அதில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

 அந்த வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அதேபோல் அசீம் படைத்தளபதியாகவும், விக்ரமன் ஆலோசகராகவும், மணிகண்டா ராஜேஷ் இளவரசராகவும், ஜனனி இளவரசியாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

முதல் ப்ரமோவில் இவர்களின் கெட்டப் எப்படி உள்ளது என்று வெளியாகியது.இரண்டாவது ப்ரமோவில் பெரிய சண்டையே வெடித்தது.அதாவது அசீம் எச்சில் துப்பித் தந்தால் சாப்பிடுவீங்களா என்று பேசுகின்றார்.இதனால் கடுப்பான அசீம் அநாகரிகமாக பேசாதீங்க எனத் திட்டுகின்றார்.அத்தோடு அசீம் யாரைப் பார்த்து ஏய் என்று திட்டுகிறாய் யாராடா நீ என்று கேவலமாக திட்டி சண்டை பிடிக்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதிலும் ஓயாத சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.அதில் விக்ரமன் இந்த வீட்டில் இவருக்கென்ன தனி அதிகாரம் கொடுத்து இருக்கா..இத்தனை பேர் பார்க்கிறீங்களே எனக் கேட்க வெளியால போய் பேசுய்யா என அசீம் திட்டுகின்றார்.இப்படி மாறி மாறி சண்டை போட்டுக்கொள்ள திடீரென விக்ரமன் மைக்கை கழட்டி போடுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement