• Jul 25 2025

விக்ரமன் இந்த காரணத்துக்காகவே இறுதிச் சுற்றுக்கு வருவார்- கதிரவன் சொன்ன முக்கிய பொயின்ட்- ஆமாம்ல கரெக்டா தான் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இதனால் போட்டியாளர்கள் அனைவருமே செம குஷியில் இருந்தார்கள்.இதனால் பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களில் யார் இறுதி சுற்று வரை செல்வார்கள் என்பது பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் விக்ரமன் குறித்து கதிர் பேசியுள்ளார். அப்போது கதிர்,"பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போது விக்ரமன் பற்றிய எனது கண்ணோட்டம் வேறு விதமாக இருந்தது. இதுபற்றி அவரிடமே நான் பேசியிருக்கிறேன். ஆனால், சூழலை அவர் கையாளும் விதம் எனக்கு பிடித்திருந்தது.


இருப்பினும், அவரை பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளும்போது அவர் பின்தங்குவதை கவனித்திருக்கிறேன். அதற்கு பிறகு அந்த விஷயத்தை அவர் மாற்றிக்கொண்டார். சமீபத்திய டாஸ்க்களிலும் அவர் செயல்பட்ட விதம் அருமையாக இருந்தது.


 போட்டியில் திறமையை காட்டும் அதே நேரத்தில், ஒரு விஷயத்தை அணுகுவதிலும், அதை எடுத்துக்கொள்ளும் விதத்தையும் அவர் மாற்றியிருக்கிறார். அதனால் அவர் இறுதி சுற்றுக்கு செல்ல தகுதியானவர் என்று நினைக்கிறேன்" என்று கூறி பாராட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement