• Jul 25 2025

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அசிங்கப்பட்ட ஆரி..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகி உள்ளது.இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

எனினும் தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர்  வெளியானது. இந்நிலையில் நேற்று  மாலை 6 மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த விழாவில் பிக்பாஸ் ஆரி வந்து இருந்தார்.அந்த நேரம் எல்லோரும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள்.அவ்வாறு இருக்கும் போது ஆரியை மட்டும் கூப்பிடவில்லையாம்.ஆனால் அவர் தன்னை தான் கூப்பிடப்போகிறார்கள் என எழுந்து வந்தும் அவரை கூப்பிடவில்லை என சமூகவலைத்தளங்களில் கேலியாக பார்க்கப்பட்டு விமர்சனம் செய்து வருகிறார்கள் பத்திரிகையாளர்கள்.


Advertisement

Advertisement