• Jul 25 2025

அப்பத்தாவுக்கு நடந்தது என்ன..? குணசேகரன் கொடுத்த பதில்...அதிர்ச்சியான ஜனனி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இதனால் குணசேகரன் இந்த நிச்சயம் நடக்காது என உறுதியாக சொல்ல எஸ் கே ஆர் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. 

அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும், அந்த திருமணம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.

 அந்த வீடியோவில் அப்பத்தா எங்க போச்சுன்னு தெரியல உங்க அண்ணி யாருக்காவது போன் போட்டு கேளுமா என விசாலாட்சி சொல்ல குணசேகரன் எங்க போக போகுது? அது என்ன சின்ன குழந்தையா என பதில் அளிக்கிறார்.

இதன் பிறகு ஜனனி மற்றும் சக்தி ஹாஸ்பிடல் இருக்க டாக்டர் இப்ப நான் சொல்ல போறது நீங்க பொறுமையா கேட்கணும் என சொல்ல ஜனனி என்ன அது என்ன பதற்றம் அடைகிறார். 

இதனால் அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு குணசேகரன் செய்த சூழ்ச்சி என்ன என்பது குறித்த விஷயங்கள் இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement