• Jul 26 2025

பாக்கியா தோல் மேல் கை போட்டு ஜோடி சேர்ந்த கோபி – ராதிகா பார்த்தா என்ன ஆகிறது..? கலாய்க்கும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது படாத பாடு பட்டு வருகிறார்.

ராதிகாவை விட பாக்கியாவே மேல் என பல நேரங்களில் புலம்பும் அளவுக்கு கோபியின் நிலைமை மோசம் ஆகிவிட்டது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது தண்ணீர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் கேர்ளாக மாறிய பாக்யாவின் தோள் மீது கை போட்டு ஜோடியாக எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் என கவிதையாக பதிவு செய்து பாக்யாவின் அழகை வர்ணித்துள்ளார்.

இதையெல்லாம் ராதிகா பார்த்தா என்ன ஆகிறது என ரசிகர்கள் கோபியை கலாய்த்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement