• Jul 23 2025

தயாரிப்பாளரிடம் சென்று பிரியங்கா அருள் மோகன் செய்த செயல்...நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் பரிதாபம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போதைய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் பிரியங்கா அருள் மோகன்.இவர் அதிகமாக படங்கள் நடிக்காவிட்டாலும் தமிழ் திரையுலகில் மூன்று படங்களை நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு பெற்று விட்டார்.

இவர் நடித்த மூன்று படங்களில் இரண்டு படங்களுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.அதாவது டாக்டர் மற்றும் டானில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்து இருந்தனர்.அதன் பின் நடிகர் சூர்யாவுடனும் நடித்து இருந்தார். தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து மிகபெரிய பேக்கப் கேரியரை ஆரம்பித்து வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த டிக்டாக் என்ற படம் கிடப்பில் இருந்துள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளர் பிரியங்கா கிளாமரில் தாராளம் காட்டி நடித்த திரைப்படத்தை வெளியிட தயாராகிவிட்டாராம். இதனை கேள்விப்பட்ட பிரியங்கா மோகன் தயாரிப்பாளரிடம் சென்று படத்தினை வெளியிட வேண்டாம் என்று தெரிவித்து இருக்கிறார்.

அந்த படம் திரையில் வந்தால் தன்னுடைய மார்க்கெட் அடிவாங்கும் என்றும் தன் இமேஜ் குறைந்துவிடும் என்று கூறி ரிலீஸ் செய்யும் முயற்சியை கைவிடும் படி கேட்டுள்ளார்.அதுவும் பத்தாமல்  ஒரு படிக்கு மேல் சென்ற பிரியங்கா, படத்தின் செலவு எவ்வளவு என்பதை கேட்டு மொத்தமும் கொடுத்துவிடுகிறேன் என்று தன்னுடைய பணத்திமிரை காட்டியிருக்கிறார்.


நடிச்சது இரண்டே படம் அதற்குள் ஆணவத்தில் தலைக்கால் புரியாமல் ஆடுறாங்களே என்று சினிமாவை சேர்ந்தவர்கள் விமர்சித்தும் வருகிறார்களாம்.ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்து ரிலீஸ் செய்யாமல் இருந்தால் அவரின் மன நிலையும் கஷ்டத்தையும் நடிகை நடிகர்கள் அறிவதில்லை என்றும் குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement