• Jul 26 2025

விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட ஜீவா... கதறி அழும் ப்ரியா... மனைவி எடுத்த அதிரடி முடிவு... இனி நிகழப்போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவா ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றார். அப்போது ஜீவாவிற்குப் போன் வருகிறது. அதனை எடுத்துப் ப்ரியா பேசுகின்றார். அப்போது போனில் வக்கீலின் உடைய மேனேஜர் "ஜீவா சார் அவருடைய மனைவியை விவாகரத்துப் பண்ணப் போறாராம், அதுதான் விவாகரத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டு கோர்ட்டுக்கு வர்றன்னு சொல்லி இருந்தாரு" எனக் கூறுகின்றார்.


இதனைக் கேட்ட ப்ரியா அதிர்ச்சி அடைகின்றார். பின்னர் விவாகரத்துப் பத்திரத்தில் ஜீவா கையெழுத்து போட்டிருப்பதை பார்த்து கதறிக் கதறி அழுகின்றார். பின்னர் இருவரும் இணைந்து காரில் சென்று கொண்டிருக்கின்றனர். இடையில் இறங்கிய ப்ரியா விவாகரத்துப் பத்திரத்தைக் காட்டி "இதற்கு என்ன அர்த்தம்" என ஜீவாவிடம் கேட்கின்றார்.


பதிலுக்கு ஜீவா "நான் நீ என்மேல் வச்சிருக்கிற அன்பைப் புரிஞ்சுக்கிட்டேன், அதனால் தான் இதை மறைத்து வைத்தேன் என்கிறார். பதிலுக்கு ப்ரியா "நீங்க எதுவுமே பேச வேணாம், இனிமேல் நீங்க யாரோ, நான் யாரோ" எனக் கூறிச் செல்கின்றார்.


Advertisement

Advertisement