• Jul 25 2025

தொடர் அவமானங்களை சந்திக்கும் ஜீவா... கோபத்தில் மீனா... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இனி நடக்கப் போவது என்ன..? வெளியானது ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதில் மீனாவின் தந்தை "நம்ம சூப்பர் மார்கெட்டிற்கு அரிசி சப்ளை பண்ணிய சுப்பையாண்ணையை இனிமேல் சப்ளை பண்ண வேணாம் எண்டு சொல்லீட்டீங்களோ" என ஜீவாவிடம் கேட்கின்றார். அதற்கு ஜீவா "அவர் அனுப்பிய அரிசியில் நிறைய கல் இருக்கு அதனால் வேணாம் எண்டிட்டன் மாமா" எனக் கூறுகின்றார்.


இதனைக் கேட்டதும்  மாமனார், எந்த முடிவு எடுக்க முதலும் தன்னிடம் கேட்குமாறு கூறுகின்றார். மறுபுறத்தில் ஜீவா "உங்க அப்பா மொத்த வியாபாரத்தையும் என்னிடம் கொடுத்த பிறகும் என்னை நம்பவே இல்லை" என மீனாவிடம் கூறிப் புலம்புகின்றார்.

பின்னர் மாமனார் " சுப்பையாண்ணையை போலீஸ் தேடுதாம், நல்ல வேளை நம்ம தப்பிச்சோம் மாப்பிள்ளை" என ஜீவாவிடம் கூறுகின்றார். அதற்கு ஜீவா "அவர் மட்டுமில்லை மாமா நமக்கு சப்ளை பண்றவரும் கூட.." என இழுக்கின்றார். இதற்கு மாமனார் ஒருத்தன் தப்பு பண்ணிட்டால் எல்லாரும் தப்பு பண்ணுவாங்க என்று நினைக்காதீங்க, இனிமேல் எந்த முடிவெடுத்தாலும் என்னிடம் கலந்து பேசி முடிவெடுங்க" எனக் கூறி ஜீவாவை அவமானப்படுத்துகின்றார். அதற்கு மீனா கோபத்தில் முறைத்துப் பார்க்கின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement