• Jul 24 2025

தேட மாட்டேன் ஆனால் சிரிப்பேன்.. திடீரென அட்வைஸ் மழை பொழிந்த சன்னி லியோன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கவர்ச்சி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான சன்னிலியோன் பாலிவுட்டில் நுழைந்த பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். 

இதனைத் தொடர்ந்து தற்போது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். சன்னிலியோன் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய சன்னி லியோனிடம்,  அவரது பேச்சை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட தர்ணா துர்காவின் செயல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சன்னி லியோன் பதிலளிக்கையில் "நான் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரின் பேச்சுகளையும் மற்றவர்கள் கேலி செய்கிறார்கள்.

யாராவது உங்களைப் பற்றி நன்றாகப் பேசினாலும் அல்லது உங்களைப் பற்றி கேலி செய்தாலும் அல்லது உங்களைப் பாராட்டினாலும், அவர்கள் உங்களைப் பற்றி பேசும் வரை, அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி எதையும் கண்டுக் கொள்ளாதீர்கள்" என அட்வைஸ் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது மேலும் அவர் கூறுகையில் "மக்கள் என்னை விரும்புவதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் சினிமா தொழிலில்  நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளேன். அதை அப்படியே தக்கவைக்க திட்டமிட்டுள்ளேன்.  யாராவது என்னை கிண்டல் செய்தால், அந்த அளவுக்கு நான் உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைக் கொள்கிறேன். 


அதேசமயம் என்னை கிண்டல் செய்தவர்களை நான் தேடவில்லை. ஆனால் கிண்டல் செய்யும் பதிவுகளை பார்த்து சிரிப்பேன்" எனவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement