• Jul 25 2025

பொய் கலெக்ஷன் சொல்றாங்க.. திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசமாக பேசிய வீடியோ..இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் கதாநாயகர்களுக்கு  நடுவில் போட்டி இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களது படங்கள் பெறும் வசூல் விவரத்தை பொறுத்து தான் அவர்களது நிலை என்ன என்பது கணக்கிடப்படுகிறது.

இதனால் சில கதாநாயகர்களில்  படங்களுக்கு படம் வெளியான அதே நாளில் அல்லது அடுத்த நாளில் வெற்றி விழா நடத்தி அவர்களது இமேஜை காப்பாற்றும் நிகழ்வும் நடக்கிறது.

எனினும் தற்போது பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தயாரிப்பாளர்களை விளாசி உள்ளார்.

"முதல் நாள் 5 கோடி வசூல் வந்தால், அதை 10 கோடி அல்லது 12 கோடி வந்திருக்கிறது என பொய்யாக தயாரிப்பாளர்களே அறிவிக்கிறார்கள். "

"ஒரு படம் தோல்வி அடைந்தால் 'தோல்வி' என வெளிப்படையாக சொல்லுங்க.. அப்போ தான் அந்த ஹீரோவுக்கு உரைக்கும். அப்போது தான் அடுத்த படத்தில் ஒழுங்காக நடிப்பார்கள்."

"தயாரிப்பாளர்கள் பொய் சொல்ல கூச்சப்பட்டால் தான் தமிழ் சினிமா மிக பெரிய அளவில் வெற்றி பெற முடியும்" என அவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 4ஒரு படம் Failure னா Failure னு சொல்லுங்க அப்பதான் அந்த ஆர்டிஸ்ட்டுக்கு உரைக்கும்



Advertisement

Advertisement