• Jul 25 2025

கண்ணீர்வடிக்கும் குணசேகரன்....கை உடைந்து கதறும் கரிகாலன்...பரபரப்பு திருப்பங்களுடன் எதிர்நீச்சல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் குணசேகரன் தனது தம்பி மற்றும் தாயின் முன்னிலையில் நின்று பேசுகின்றார்.அதாவது பிரிச்சு ஆளுற சூழ்ச்சி நடக்கிதுப்பா...உனக்கு தெரியாது ஒண்ணும் இல்லை...என்னை ஒண்ணும் தெரியாத முட்டாள் பயங்க என்று நினைக்கிறாங்க...என கண்கலங்கி பேசுகின்றார்.

இதனை முழுவதும் ரேணுகா கேட்டுக்கொண்டு நிற்கின்றார்.இதன் பின்னர் கரிகாலன்கை முறிந்து கதிர் அவரை பிடித்த வண்ணம் வருகின்றார்.

கரிகாலன் சக்தியால் தான் கை முறிந்தது என கதறி அழுது கொண்டு தாயிடம் சொல்கின்றார்.இ்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.


Advertisement

Advertisement