• Jul 26 2025

நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கு - நடிகர் சூரஜ் விடுதலை..! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜியா கான் கடந்த ஜூன் 3-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஜியா கானை தற்கொலைக்கு தூண்டினார் என்று சுராஜ் பஞ்சோலி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் அவரை கைது செய்திருந்தனர். 

சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் இறுதி கட்ட விவாதங்கள் அண்மையில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இறுதி கட்ட விசாரணையில் இன்று  நடிகை ஜியா கான் தற்கொலை யில் நடிகர் சூரஜ் பஞ்சோலி க்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்தது .


Advertisement

Advertisement