• Jul 25 2025

பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசிய நடிகை ப்ரியா பவானி சங்கர்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் கால் பதித்து அங்கும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். நடிகைகள் மற்றும் சாதாரண பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்துப் பலரும் சமீபகாலமாக ஓப்பனாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ப்ரியா பவானி சங்கரும் அது குறித்து தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்தவகையில் "பாலியல் தொல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தான் இருந்து வருகின்றது" எனக் கூறியுள்ளார்.


மேலும் "பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தைரியமாக பேச வேண்டும். அதை விட முக்கியமானது அவர்கள் சொல்வதை நம் சமூகம் முதலில் கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பல வகையில் குறை சொல்வதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை, ஏன் இப்போ சொல்கிறாய் என்பது போன்ற கேள்விகளை கேட்பதை உடனடியாக அவர்கள் நிறுத்த வேண்டும்" எனவும் அவர் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "பாலியல் தொல்லை பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. ஒரு பெண் எந்த துறையில் வேலை செய்கிறார், அவர் எது மாதிரியான வேலை செய்கிறார் என்ற பாகுபாடு மட்டும் இல்லாமல் பல வழிகளில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார். 


எனவே பாதிக்கப்பட்டது குறித்து பெண்கள் பேசினால் நாம் அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்க வேண்டும், அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை குறை சொல்வதை நிறுத்த வேண்டும்" எனவும் நடிகை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement