• Jul 23 2025

அஜித்தின் துணிவையடுத்து வாரிசு படத்தையும் வாங்கிறாரா.. உதயநிதி..வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார் விஜய்.மேலும்   இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார்.அத்தோடு  சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எனினும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், வாரிசு திரைப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இருக்காது எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதன் காரணமாக இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் இருந்து சமீபத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் செம ஹிட்டடித்துள்ளது. இவ்வாறுஇருக்கையில் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அதே தினத்தில் அஜித்தின் துணிவு படமும் வெளியாகவுள்ளது.

எனினும் இதையடுத்து அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றது. அத்தோடு விஜய்யின் வாரிசு படத்தையும் உதயநிதி தான் வாங்கி வெளியிடுகிறார் என்ற தகவல் வந்தது. ஆனால் வாரிசு படத்தின் விநியோக உரிமையை லலித் குமார் வாங்கியுள்ளார்.

"வெளிய போய் கல்யாணம் பண்ணிக்கங்க"..நள்ளிரவில் பிக்பாஸ் போட்டியாளருக்கிடையில் நடந்த உரையாடல்.. !

இவ்வாறுஇருக்கையில்  இதுபற்றி உதயநிதியிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, துணிவு படத்தை நாங்கள் தான் வாங்கி வெளியிடுகின்றோம். ஆனால் வாரிசு படத்தை நாங்கள் வாங்கவில்லை. ஒருவேளை அதற்கான வாய்ப்புகள் அமைந்தால் யோசிப்போம் என்றார் உதயநிதி.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டில் உதயநிதி வாங்கி வெளியிடுகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்-திடீரென எழுந்த சர்ச்சை

Advertisement

Advertisement