• Jul 23 2025

KGF இயக்குநரை அழைத்து பேசிய அஜித் ...ஒரு வேளை அதுவா இருக்குமோ? டவுட்டில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித்தின்  விடாமுயற்சி படம் துவக்கத்தில் இருந்து பிரச்சனை பற்றி மட்டும் தான் தகவல் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது ரசிகர்களுடைய கேள்விக் குறியாக இருக்கிறது.

அத்துடன் இவருடைய ரசிகர்களும் இதனால் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். மேலும் விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து தூக்கிப் பிறகு அஜித் செய்த முதல் வேலை இயக்குநர் பிரசாந்த் நீல்-க்கு அழைப்பு விடுத்தது தான். அப்பொழுது இவர்கள் இருவரும் சந்தித்த நிலையில் அஜித் அவரிடம் நேரடியாகவே நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார்.

இதை கேட்ட இயக்குநருக்கு தலைகால் புரியாமல் ரொம்பவே பதட்டத்துடன் நீங்கள் இப்படி கூப்பிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களுடைய தீவிர ரசிகன் என்று சொல்லி இருக்கிறார். அதன் பின் நீண்ட உரையாடலுக்கு அடுத்து தற்போது சலார் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறேன்.

அதற்கு அடுத்து வேறு யாரிடமும் அட்வான்ஸ் வாங்காமல் உங்களிடம் நான் வருகிறேன். அப்பொழுது நீங்கள் ஓகே சொன்னால் கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்ற வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். இதனால் கண்டிப்பாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்குள் இவர்கள் கூட்டணி தொடங்குவது உறுதியாகிவிட்டது.எனவே மேலதிக அப்டேட்களுக்காக காத்திருப்போம்.




Advertisement

Advertisement