• Jul 25 2025

அப்பா இறந்த பின் கவலையில் அடையாளமே தெரியாமல் மாறிய அஜித்.. புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் தந்தை சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதற்கு விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பலரும் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று தங்களுடைய ஆறுதலினைத் தெரிவித்து இருந்தனர்.


இந்நிலையில் தந்தையின் மரணத்திற்கு பின்னர் அஜித் தற்போது முதன் முறையாக வெளியே வந்துள்ளார். அதாவது வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற அவரை ரசிகர்கள் பலரும் சூழ்ந்துகொண்டனர். 

ரசிகர்களைக் கண்டதும் கோபம்கொள்ளாத அஜித் அவர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். மேலும் ஆஷ் கலர் கார்கோ பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து ஸ்மார்ட்டாக அஜித் இருந்தாலும், அஜித்தின் முகம் வாடிப்போய் உள்ளமை அந்தப் புகைப்படங்களின் மூலமாக தெரிகின்றது.


இதனால் தந்தையை இழந்த சோகத்தில் இருந்து அஜித் இன்னும் மீளவில்லை என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றார். அதுமட்டுமல்லாது எப்போதுமே துணிச்சலுடன் இருக்கும் அஜித்தின் முகத்தில் கவலை குடி கொண்டிருப்பது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதோடு, சற்று கவலையையும் உண்டாக்கி உள்ளது.


Advertisement

Advertisement