• Jul 25 2025

சீரியலில் களமிறங்கிய ஆல்யா மானசாவின் மகள்...அதுவும் எந்த சீரியலில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில், செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ஆல்யா மானசா. 

இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த, சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து இவர்கள் இருவரும் சீரியலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஆல்யா தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலிலும் சஞ்சீவ் கயல் என்னும் சீரியலிலும் நடித்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஸ் என்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.


இந்நிலையில்தான் இவர்களின் மகளான ஐலா தற்போது ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். சன்டிவியில் சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் சீரியலில் சிறிய கதாப்பாத்திரத்தில் வந்து போகிறார். 


அதாவது கயல் நாடகத்தில் சஞ்சீவ் கனவு காண்பார் அதில் சஞ்சீவ் - சைத்ரா ரெட்டியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவராக ஐலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement