• Jul 25 2025

நாமினேஷனில் இருக்கும் ஏழு போட்டியாளர்களில் வெளியேறப்போகும் அடுத்த நபர் யார் ? அட இவரா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் தொடங்கப்பட்டு  இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து  வைத்திருக்கின்றது.  சூடு பிடித்த சீசன் 7 இன் முதல் போட்டியாளராக கடந்த ஞாயிற்றுக் கிழமை அனன்யா வெளியேறியிருந்தார். மீதம் இருக்கும் 17 போட்டியாளர்களும் அடுத்த நாமினேஷன் லிஸ்ட்டை தயார் செய்து இருக்கின்றனர். அதற்கு முன் பவாவும் வெளியேறிவிட்டார். இதில் பிக்பாஸ் மற்றும் ஸ்மோல் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தனித் தனியாக நாமினேட் செய்யப்பட்டனர்.


அந்தவகையில் இவ்வாரம் பிரதீப், விசித்திரா, ஜோவிகா, மாயா, அக்சயா, விஷ்ணு , பூர்நிமா ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேட் லிஸ்டில் இருக்கின்றனர். பிக்பாஸ் ரசிகர்கள் திங்கள் கிழமையிலிருந்து  இந்த ஏழு பேருக்கும் தங்கள் ஓட்டுக்களை போட துவங்கி இருக்கின்றனர். முதல் நாள் ரசிகர்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் பிரதீப்  மொத்த ஓட்டுக்களையும் அள்ளி முதலிடத்தில் இருக்கின்றார். அடுத்து விசித்திரா, ஜோவிகா, அக்சயா, விஷ்ணு, பூர்ணிமா, என கடைசி லிஸ்ட்டில் மாயா இருக்கின்றார்.


இதனை வைத்து பார்க்கும் போது  மாயா தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement