• Jul 25 2025

அனுவுக்கு தெரிய வந்த உண்மை- திருதிருவென முழித்த கார்த்திக்- பதற்றத்தில் இருக்கும் சுந்தரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் அனுவின் நண்பனான சிவா எப்படியாவது கார்த்திக்கின் உண்மை முகத்தை அனுவுக்கு தெரியப்படுத்த புதிய திட்டம் போட்டு வருகின்றார். மேலும் கார்த்திக் சுந்தரியின் கணவருக்கு சர்ப்போட் பண்ணுவதாக அனுவுவிடம் போட்டுக் கொடுக்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க அனுவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கு என்பதை சுந்தரியிடமும் அனுவின் அம்மாவிடமும் கார்த்திக் சொல்லிக் கொண்டிருப்பதை அனு மறைந்து நின்று கேட்டு விடுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது இனி வரும் எப்பிஷோட்களில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement