• Jul 25 2025

பிரபல நடிகரின் படம் குறித்து வருத்தத்துடன் பேசிய ஏ.ஆர். முருகதாஸ்.. நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளிவந்த தினா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதன்பின், இவருடைய தயாரிப்பில் உருவாகி வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் 1947. இப்படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக  நடித்துள்ளார்.

தர்பார் படத்திற்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்தார். ஆனால், அப்படம் திடீரென வேறொரு இயக்குநரின் கைக்கு போனது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

இதில் ' விஜய் படத்திற்காக நான் ஒரு வருடம் கடினமாக உழைத்தேன். ஆனால், அந்த படம் எனக்கு கிடைக்கவில்லை ' என  தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement