• Jul 24 2025

அவசரத்துல சரியாக பிளான் பண்ண முடில- தர்பார் படம் தோல்வியடைந்ததைக் குறித்து ஓபனாகப் பேசிய ஏ.ஆர் முருகதாஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தர்பார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. இதனால் இப்படம் தோல்வியென கூறி விமர்சனங்கள் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக தர்பார் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.இதில் "தர்பார் தோல்வி படம் தான். அதுக்கு காரணம் என்னோட திட்டம் தப்பா போனது தான். 


ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி கட்சி ஆரம்பிக்க போறாருனு சொன்னாங்க "."இது தான் அவரோட கடைசி படம்னு சொல்லி ஒப்பந்தம் பண்ணாங்க. அவசரத்துல என்னால சரியா திட்டமிட கூட முடியல" என கூறியுள்ளார். 


மேலும் இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement