• Jul 23 2025

குழந்தை பற்றிய உண்மையை போட்டுடைத்த அர்ச்சனா...செந்தில் எடுத்த முடிவு என்ன...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

அதாவது அர்ச்சனா திருட்டு போன குழந்தை தான் என் குழந்தை என்று உண்மையை கூறிவிடுகின்றார்.ஆனால் எதிர் வீட்டு பிள்ளையின் அப்பா எனக்கு இரண்டு குழந்தையும் வேணும் எனக் கூற அரச்சனா ஷாக்கடைகின்றார்.

இதன் பின் சந்தியா சமாதானம் செய்து அவரவர் குழந்தையை கொடுத்து விடுகின்றார்.இதனால் மொத்த குடும்பமும் கண்கலங்கி நிற்கின்றது.பின் மாறி மாறி குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு எடுத்து செல்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் பிள்ளையை அத்தை காலில் வைத்துவிட்டு காலில் விழுந்து அழுகின்றார்.என்னை மன்னிச்சிடுங்க..என்று கதற..அத்தையும் மன்னிச்சிட்டேன் எழுந்திரு என்று கூறிவிட்டு அர்ச்சனாவின் குழந்தையை எடுத்து கொஞ்சுகின்றார்கள்.

இதன் பின் அத்தை அர்ச்சனாவின் பிழைகளை சுட்டிக்காட்டி அவருக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

இவ்வாறு எல்லோரும் அந்த பிரச்சனை பற்றி பேசிமுடிந்த நிலையில் செந்தில் ரூமுக்குள் கொண்டு போய் அர்ச்சனாவை திட்டுகின்றார்.பின் அவர் கதறி அழுகின்றார்.

இது பத்தாதது என்று அர்ச்சனாவின் அம்மாவும் வந்து திட்டுகின்றார்.எல்லேரும் சமாதானப்படுத்தியும் அவர் கேட்காதும் திட்டுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement